News October 27, 2025
புதுச்சேரி: விடுதலை நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

புதுச்சேரியில் விடுதலை நாள் விழா வரும் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முதல்வர் ரங்கசாமி கடற்கரை காந்தி திடலில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி, விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலை காந்தி திடல் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இரவு பகலாக ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி பேருந்துகள், 15 ஏ.சி. இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவை தொடக்க நிகழ்வு மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்றது. இந்த சேவையை, ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
News October 27, 2025
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரியில் முதல் முறையாக எலெக்ட்ரிக் பேருந்துகள் இன்று முதல் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. புதுச்சேரி நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 10 ஏ.சி பேருந்துகள், 15 ஏ.சி. இல்லாத பேருந்துகள் என மொத்தம் 25 மின்சார பேருந்துகளின் சேவை, இன்று மறைமலை அடிகள் சாலையில் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
News October 27, 2025
புதுச்சேரி: தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு நேர்காணல்

கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரியின் மார்பக புற்று நோயியல் துறை சார்பில், திட்ட தொழில் நுட்ப வல்லுனர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் 11 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 6 பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக உள்ளனர். அவர்களின் விவரம் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாளை மறுநாள் (29.10.2025) புதன்கிழமை ஜிப்மர் வளாகத்தில் நேர்காணல் நடக்கிறது.


