News October 27, 2025

சற்றுமுன்: இந்திய வீராங்கனை தற்கொலை

image

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம்(35) ம.பி.,யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த இவர், வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரி ரோஷிணி தெரிவித்துள்ளார். ரோகிணி கலாம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்கொலை தீர்வல்ல!

Similar News

News October 27, 2025

BREAKING: அடுத்ததாக 12 மாநிலங்களில் SIR

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக ECI அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதற்கட்டமாக பிஹாரில் வெற்றிகரமாக SIR நடத்தப்பட்டதாகவும், 2-ம் கட்டமாக 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR நடைபெற உள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் சரிபார்ப்பு மிக மிக அவசியம் என்றும் கூறியுள்ளார்.

News October 27, 2025

IND Vs SA: தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிப்பு

image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான, தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான அணியில் டெவால்ட் பிரெவிஸ், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சென், ரபாடா, கேஷவ் மஹராஜ், ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம் உள்ளிட்ட 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவ.14-ம் தேதி கொல்கத்தாவிலும், நவ.22-ம் தேதி கவுஹாத்தியிலும் நடைபெறவுள்ளது.

News October 27, 2025

TN அரசு அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக?: BJP

image

SIR தொடர்பாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடும் TN அரசு அதிகாரிகளை, திமுக அரசு சந்தேகிக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். RK நகர் இடைத்தேர்தலின் போது போலி வாக்காளர் குறித்து திமுக வழக்கு தொடர்ந்தது மறந்து விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தவறுகளை மறைக்கவே, திமுக SIR-ஐ கையில் எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!