News October 27, 2025

நகை திருடிய பெண் உட்பட 2 பேர் கைது

image

அரியலூர் மாவட்டம் தளவாய் வங்காரம் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த முதியவரை ஆண்டிமடம் சிலம்பூரை சேர்ந்த கலையரசி (35), ஆசை வார்த்தை கூறி மது குடிக்க வைத்துள்ளார். மேலும், அவரது கூட்டாளியான ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பிள்ளையார் கோயில் தெருவை சார்ந்த நவீன்குமார் என்பவரை வரவழைத்து முதியவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளார். இதயடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News October 27, 2025

அரியலூர் மக்களே.. இனி இது அவசியம்!

image

அரியலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கம் செய்து நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

அரியலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறலாம்?

image

அரியலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News October 27, 2025

அரியலூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்!

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு அக்டோபர் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (31.10.2025) வெள்ளிகிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்தார்.

error: Content is protected !!