News October 27, 2025

FLASH: மீண்டும் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

image

கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(அக்.27) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 84,457 புள்ளிகளிலும், நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 25,858 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Kotak Mahindra, HDFC Bank, ICICI Bank, Tata Steel உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளதால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News

News October 27, 2025

உடல் வலியை குறைக்க இந்த கஞ்சியை குடிங்க!

image

முன்பெல்லாம் வீட்டில் சத்தான உணவுகளை செய்து சாப்பிடுவோம். ஆனால் இன்றைய சூழலில் எல்லாம் Fast Food தான். இதனால் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள். இதற்கு உளுந்தங்கஞ்சியை ரெகுலராக சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். வாரத்தில் 2 முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் அவர்கள், இதன் மூலம் மூட்டு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி உள்ளிட்டவைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

News October 27, 2025

மீண்டும் திமுக ஆட்சி.. சிரித்தபடி பதிலளித்த OPS

image

சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த OPS-சிடம் ‘திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM கூறி இருக்கிறாரே’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பதிலளித்தார். திமுகவா! என்று அழுத்தமாக கேட்ட உடனே, சுதாரித்துக் கொண்ட அவர், மக்கள் பேசிக் கொள்கிறார்கள்; என் மீது பழியை போட்டுவிடாதீங்க சாமி! என சிரித்துக் கொண்டே கூறினார்.

News October 27, 2025

ஒரு மூத்தவனா சொல்றேன்… கேளுங்க: சீமான்

image

நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கு கொடுமையானது என சீமான் தெரிவித்துள்ளார். வேறு எங்கேயும் நடக்காத இது, இங்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல் என்பது வாழ்வியல் என்று குறிப்பிட்டுள்ளார். தம்பி, தங்கைகளுக்கு ஒரு மூத்தவனாக சொல்கிறேன், அரசியலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!