News October 27, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வேளாண்மை அடுக்ககம் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தனி குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. பிஎம் கிஷான் திட்டத்தில் பயன் பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் தங்களது அடுத்த அடுத்த தவணைகளை பெற நில உடமை ஆவணங்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வலைதளத்தில் இதுவரை பதிவு செய்யாத 6868 விவசாயிகள் அருகில் உள்ள இ- சேவை மையத்தை அணுகலாம்.
Similar News
News October 27, 2025
நெல்லை: இனி வரிசைல நிக்க தேவையில்லை!

நெல்லை மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!
News October 27, 2025
நெல்லை: தர்ப்பூசணி பழத்தில் முருகர்

கந்த சஷ்டி திருவிழா முன்னிட்டு இன்று மாலை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா நடைபெற இருக்கிறது. எனவே முருக பக்தர்கள் உற்சாகமுடன் முருகரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டியை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சமையல் கலைஞர் செல்வகுமார் தர்பூசணி பழத்தில் முருகரின் உருவத்தை வரைந்துள்ளார்.
News October 27, 2025
திருச்செந்தூர் செல்லும் நெல்லை பக்தர்கள் கவனத்திற்கு

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக பஸ்களில் செல்லும் பக்தர்களுக்கு உரிய பஸ்கள் திருச்செந்தூர்- நெல்லை சாலையில் உள்ள சபி டிரேடர்ஸ் எதிர்புறம் உள்ள தற்காலிக பஸ் நிலைய இடத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து இலவச சர்குலர் பஸ்கள் மூலம் நகருக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன சிறப்பு அனுமதி சீட்டு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.SHARE!


