News October 27, 2025
Montha புயல்: 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

Montha புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, நீலகிரி, தி.மலை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
Similar News
News October 27, 2025
டிகிரி போதும், மத்திய அரசில் வேலை..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited- BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc Engineering Degree முடித்தவர்கள், 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ₹40,000 – ₹1,40,000 வரை வழங்கப்படுகிறது <
News October 27, 2025
அடுத்த தலைமை நீதிபதியா சூர்யகாந்த்?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணியை மத்திய சட்ட அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அனுபவத்தின் அடிப்படையில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள சூர்யகாந்தை தலைமை நீதிபதியாக நியமிக்க கவாய் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
News October 27, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரியில் அதிமுக, தவெகவில் இருந்து விலகி 150-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். பர்கூரில் நடைபெற்ற விழாவில், திமுக MLA மதியழகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து திமுகவினர் வரவேற்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாற்றுக் கட்சியினரை இணைக்க திமுக தலைமை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.


