News October 27, 2025
வி.புரம்: குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண்!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(42). இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் கடந்த 1ஆம் தேதி ராஜேஸ்வரி தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 27, 2025
விழுப்புரம் : ஆட்சியரகத்தில் தீ குளிக்க முயற்சி!

விழுப்புரம் அருகேயுள்ள டட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் டிசோஸ். இவர் தாங்கள் குடியிருக்கும் இடத்தை இறந்த நபருக்கு தவறுதலாக அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்து விட்டதாகவும், இது குறித்து 10 ஆண்டுகளாக மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் இன்று(அக்.27) விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
News October 27, 2025
விழுப்புரத்தில் பெய்த மழை அளவு!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுபடி, விழுப்புரம்: 1மி.மீ, முண்டியம்பாக்கம்: 1 மி.மீ, நேமூர்: 1 மி.மீ, மரக்காணம்: 1 மி.மீ, செஞ்சி: 14 மிமீ, திண்டிவனம்: 4 மி.மீ, வல்லம் 12 மி,மீ எனப் பதிவானது.
News October 27, 2025
விழுப்புரம்: உங்க மொபைலில் இந்த Apps இருக்கா..?

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <


