News April 18, 2024
ரோஹித் ஷர்மாவின் 250ஆவது ஐபிஎல் போட்டி

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா, இன்று தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடியுள்ள 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவராவார். எம்.எஸ்.தோனி 256 போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மா, இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Similar News
News August 17, 2025
கை தசைகளை பலப்படுத்தும் புஜங்காசனம்!

✦முதுகுவலியை விரட்டவும், முதுகு மற்றும் கை தசைகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
➥தரையில் குப்புறப் படுக்கவும். இரு கைகளையும் தோள்பட்டை நிலைக்கு கொண்டு வந்து, உடல் எடையை உள்ளங்கையில் தாங்கவும்.
➥மூச்சை உள்ளிழுத்து தலையை உயர்த்தி, முதுகை முடிந்தவரை வலைத்து மார்பை முன்னோக்கி நீட்டவும்.
➥இந்த நிலையில் 15- 30 விநாடிகள் வரை இருந்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
News August 17, 2025
ED-யை கண்டு அச்சத்தில் திமுக அமைச்சர்கள்: செல்லூர் ராஜு

திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
News August 17, 2025
இட்லி கடை அக். வெந்துவிடும் SORRY வந்துவிடும்: பார்த்திபன்

‘இட்லிக்கடை’ படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக இன்ஸ்டாவில் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அதில், இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் ஆச்சர்யமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இட்லிக்கடை அக்டோபரில் வெந்துவிடும் SORRY வந்துவிடும் எனவும், மிளிரினால் என்பதை மிருணாள் என படித்தால் நான் பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.