News October 27, 2025
கடலூர்: மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாப பலி

காட்டுமன்னார்கோவில் அருகே ராஜ சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (56), தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் உரம் தூவிக்கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ய தொடங்கியது. இதில் சுப்பிரமணியனை மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 6, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
கடலூர்: விபத்து ஏற்படுத்திய போலீசார் கைது

ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக ராஜேந்திரன் என்பவரும், அதே காவல் நிலையத்தில் காவலர் இமாம் உசேன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர் நேற்று மது போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில், 2 பேர் உயிரிழந்து, 2பேர் காயமடைந்தனர். இந்நிலையில், முதுநகர் காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 5, 2025
கடலூர்: எஸ்.பி அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில், இன்று(நவ.5) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.


