News October 27, 2025

21 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் சரண்

image

சத்தீஸ்கரில் 13 பெண்கள் உள்பட 21 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வு பணிகள் நடந்து வருவதாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் சரணடைந்துள்ளனர்.

Similar News

News January 19, 2026

ஜனவரி 19: வரலாற்றில் இன்று

image

*1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். *1983 – நாஜி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். *2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 1855 – ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் பிறந்ததினம். *1990 – இந்திய மதகுரு ஓஷோ மரணம்.

News January 19, 2026

Cinema 360°: ₹11 கோடி வசூலித்த TTT

image

*ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ 3 நாள்களில் ₹11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் *சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ டிரெய்லர் இன்று வெளியாகிறது *விக்ரம் பிரபுவின் சிறை ஜன.23-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *ரவி மோகனின் BRO CODE படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்

News January 19, 2026

மகாத்மா காந்தி பொன்மொழிகள்

image

*நீ உலகில் காண விரும்பும் மாற்றமாக நீயே மாறு. *அஹிம்சை என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப் பெரிய சக்தி. *எதிரியை அழிப்பதற்கு அல்ல, அவரது மனதை மாற்றுவதற்கே போராடு. *சுதந்திரம் என்பது விரும்பியதை செய்வது அல்ல; சரியானதை செய்வதே. *ஒரு தேசத்தின் முன்னேற்றம், அது பெண்களை எப்படி நடத்துகிறது என்பதிலே தெரியும்

error: Content is protected !!