News October 26, 2025

KKR அணிக்கு அபிஷேக் நாயர் பயிற்சியாளர்

image

KKR அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் சாம்பியனான KKR, கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே வென்று 8-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இந்நிலையில், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ள KKR நிர்வாகம், முதற்கட்டமாக அபிஷேக் நாயரை பயிற்சியாளராக நியமிக்கவுள்ளது.

Similar News

News October 27, 2025

EPS எங்களை பாராட்டவா செய்வார்? துரைமுருகன்

image

CM ஸ்டாலின் ஒரு சினிமா விமர்சகராக மாறிவிட்டார் என்று EPS கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் என்றால் அப்படித்தான் பேசுவார், பிறகு எங்களை பாராட்டவா செய்வார் என்று தெரிவித்தார். மேலும், CM உத்தரவின் பேரில் நெற்பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 27, 2025

ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ரஹானே

image

ரஞ்சி டிராபியில் இன்று ரஹானே 159 ரன்களை விளாசினார். இதையடுத்து அவர் பேசும்போது, தன்னை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆஸி.,க்கு எதிரான BGT தொடரின் போது அணிக்கு நான் தேவைப்பட்டேன். ஆனால், BCCI தன்னிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்பதை ரோஹித்தும், கோலியும் நிரூபித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 501 ▶குறள்: அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.▶பொருள்: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

error: Content is protected !!