News October 26, 2025
KKR அணிக்கு அபிஷேக் நாயர் பயிற்சியாளர்

KKR அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் சாம்பியனான KKR, கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே வென்று 8-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இந்நிலையில், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ள KKR நிர்வாகம், முதற்கட்டமாக அபிஷேக் நாயரை பயிற்சியாளராக நியமிக்கவுள்ளது.
Similar News
News January 23, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 23, 2026
தமிழ்நாடு NDA பக்கம் நிற்கிறது: PM மோடி

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவுசெய்துவிட்டதாக PM மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் NDA-வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருக்கும் அவர், தமிழ்நாடு NDA-வின் பக்கம் நிற்கிறது எனவும், NDA அரசின் சாதனைகள் மாநில மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
பூமியை பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும்: சுனிதா

விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்ணங்கள் மாறுபடும் என <<18912474>>சுனிதா வில்லியம்ஸ்<<>> தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எளிதாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர வைக்கும் என்றார். மேலும், பூமியில் மனிதர்கள் இடையே நடக்கும் பிரச்னைகள், வாக்குவாதங்கள் எல்லாம் முட்டாள்தனமாக தோன்றும் எனவும் கூறியுள்ளார்.


