News October 26, 2025
சேலம்: அரசு ஐ.டி.ஐ.,யில் சேர ஆட்சியர் அழைப்பு!

சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கையில்; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை வரும், அக்.31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Similar News
News October 26, 2025
கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு பூஜை!

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து, மூன்றாம் ஆண்டு துவக்க விழா நாளை திங்கட்கிழமை 27.10.2025 காலை 9 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு 108 சங்காபிஷேக பூஜை நடை பெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற உள்ளது.
News October 26, 2025
சேலம்: அம்மா உணவகத்தில் கேஸ் கசிவால் பரபரப்பு!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு விற்பனை முடிந்த நிலையில் அனைத்து பணியாளர்களும் வீடு திரும்பினர். மாலை திடீரென கேஸ் கசிவு வெளியானது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கசிவை சரி செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
News October 26, 2025
பாமக சார்பில் போராட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தி, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்தப் போராட்டம் இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும், எனவே தமிழக அரசு உடனடியாக இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறினார்.


