News October 26, 2025
புயல் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
BREAKING: இந்தியா ஆட்டம் மழையினால் ரத்து

Women’s CWC-ல் இந்தியா, வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையினால் ரத்தானது. மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் ஆடிய வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. DLS விதிப்படி இலக்கு 126 ரன்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா 57 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
News October 27, 2025
எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது?

உடல் ஆரோக்கியத்திற்காக அன்றாடம் போதுமான நேரம் தூங்குவது மிக அவசியம். வயது அடிப்படையில் 18-60 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தது 7 மணி நேரம், 65 வயதுக்கு டாக்டர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். போதுமான நேரம் தூங்க தவறினால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும். நீங்க எவ்வளவு மணி நேரம் தூங்குறீங்க?
News October 27, 2025
அதிகாலையில் புயல்… கனமழை வெளுத்து வாங்கும்

நாளை(அக்.27) அதிகாலையில் மொன்தா புயல் உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இது, நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, காக்கிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதனையொட்டி, நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாய் இருங்கள்!


