News October 26, 2025
சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்!

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில்வரி ஆகியவை பிரதான வருவாயாக உள்ளது. இதன் காரணமாக அக்.31 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பவும், மேலும் ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று எச்சரிக்கை அறிவிப்பு ஒட்டவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Similar News
News October 26, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
சென்னை: இனி அலைச்சல் வேண்டாம் ஒரு மெசேஜ் போதும்!

சென்னை மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News October 26, 2025
கபடி வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை!

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா மற்றும் ரமேஷ்-க்கு பதக்கம் வென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு முதல்வர் ஊக்கத்தொகையாக ரூபாய் 25 இலட்சத்திற்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


