News October 26, 2025
அதிபயங்கர மெலிசா புயல்: அச்சத்தில் ஜமைக்கா, ஹைதி

கரீபியன் கடலில் உருவாகியுள்ள ‘மெலிசா’ புயல் அதி பயங்கர ‘கேட்டகரி 3’ புயலாக மாறியுள்ளது. இது ஜமைக்கா மற்றும் ஹைதி பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தும் என USA வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே மெலிசா புயலில் சிக்கி, ஹைதியில் 3 பேரும், டொமினிகன் குடியரசில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் மேலும் வலுப்பெற்று, செவ்வாய்க்கிழமை ஜமைக்காவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 26, 2025
அதிகம் காலடி படாத சுற்றுலா தளங்கள்

ரம்மியமான இயற்கை சூழலை கொண்ட ஏராளமான இடங்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இங்கு அதிகளவிலான மக்கள் செல்வதில்லை. ஆனால், இந்த இடங்களுக்கு கட்டாயம் ஒருமுறை செல்ல வேண்டும். இங்கு உள்ள இயற்கை சூழல் நம்மை பிரமிக்க வைக்கும். அது எந்தெந்த இடங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 26, 2025
வாகன ஓட்டிகளுக்கு HAPPY NEWS

சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு முக்கிய பாதுகாப்பு விதியை அமல்படுத்தியுள்ளது. இனி தயாரிக்கப்படும் பைக், ஸ்கூட்டர் அனைத்திலும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(ABS) கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை பிரீமியம் பைக்குகளில் மட்டுமே ABS அம்சம் இருந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சாலை விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT.
News October 26, 2025
சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்ததா பாகிஸ்தான்?

சவுதியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பலுசிஸ்தானை மறைமுகமாக தனிநாடு என்று குறிப்பிடும் வகையில் சல்மான் கான் பேசியிருந்தார். இதையடுத்து, அவரை கண்காணிக்கப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் தனி நாடு கேட்டு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.


