News April 18, 2024
தஞ்சாவூர்: 2,661 மது பாட்டில்கள் பறிமுதல்; 38 பேர் கைது

தேர்தல் நேரத்தில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன்படி, ஏப்.15ம் தேதி முதல் நேற்று(ஏப்.17) வரை நடந்த சோதனையில் 2,661 மது பாட்டில்கள், 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 26, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில், வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், பருவ கால பணியாளர்கள், கொள்முதல் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
தஞ்சை: Gas Cylinder-க்கு அதிக பணம் கொடுக்காதீங்க!

தஞ்சை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 26, 2025
தஞ்சை மக்களே இதை செய்தால் கரண்ட் Bill வராது!

தஞ்சை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!