News October 26, 2025
வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.. தமிழக அரசு

டெல்டா மாவட்டங்களில் கனமழை & லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ₹183.19 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
பெண் டாக்டர் தற்கொலை: ராகுல் சரமாரி கேள்வி

மகாராஷ்டிரா <<18092365>>பெண் டாக்டர் தற்கொலை <<>>வழக்கில், போலீஸ் SI கோபால், மென்பொறியாளர் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், குற்றவாளிகளை ஆளும் BJP அரசு காப்பாற்ற முயல்வதாகவும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் அந்த டாக்டரை பொய்யான உடற்கூராய்வு அறிக்கையை கொடுக்க கூறி வற்புறுத்தியதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானத கூறி அந்த டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
News October 26, 2025
பதற்றத்தை குறைக்க சில டிப்ஸ்

பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையில் அமைதியை குலைத்து, வேலை, உறக்கம், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மேலும், தலைவலி, உயர் ரத்த அழுத்தம், சோர்வு, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். எனவே, பதற்றத்தை குறைப்பது மிக அவசியம். இதற்கு என்ன செய்யலாம் என்று, மேலே பகிர்ந்துள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News October 26, 2025
புயல் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


