News October 26, 2025
திருச்செந்தூர் – நெல்லை இடையே நாளை சிறப்பு ரயில்

திருச்செந்தூரில் நாளை (27) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளன. இதன்படி நாளை (27) இரவு திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10:30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு பன்னிரண்டு முப்பது மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News February 22, 2026
தூத்துக்குடியில் கடல் அலையில் சிக்கி பெண் பலி

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி கற்பகம்(44). இவர் நேற்று அங்குள்ள மொட்டை கோபுரம் கடல் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் மற்றும் மரைன் போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News February 22, 2026
தூத்துக்குடி: தகராறில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன்(30). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தமிழ்ராஜை, பிரவீன் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த தமிழ்ராஜ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து பிரவீனை கைது செய்தனர்.
News February 22, 2026
தூத்துக்குடி: தகராறில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே நாரைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ராஜன்(30). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் தமிழ்ராஜை, பிரவீன் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த தமிழ்ராஜ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து பிரவீனை கைது செய்தனர்.


