News October 26, 2025

4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்: அரசு

image

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

Similar News

News October 26, 2025

புயல் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் இன்று மாலை 5.30 மணியளவில் ‘மொன்தா’ புயல் உருவாகவுள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக, பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இரவு 7 மணி வரை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், திருப்பத்தூர், தி.மலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 26, 2025

நிலுவை வழக்குகளும்.. கோர்ட் விடுமுறைகளும்!

image

. செப்டம்பர் 2025 கணக்கின் படி, நாட்டில் 5.60 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். பொது சேவையில் உள்ள போலீஸ், ராணுவ வீரர்கள், டாக்டர்கள், ஊடகத்துறையினர் போன்றவர்கள் 365 நாளும் பணி செய்யும் நிலையில், நீதிமன்றங்கள் மட்டும் ஏன் 196 நாள்கள் மட்டுமே வேலை செய்கின்றன என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் அல்லவா.. நீங்க என்ன சொல்றீங்க?

News October 26, 2025

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்.. உயிர்கள் பலியான சோகம்

image

ஒருபக்கம் ரஷ்ய-உக்ரைன் போரை நிறுத்த, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க பொருளாதார தடைகளை விதித்து, பேச்சுவார்த்தைக்கும் முயற்சி செய்து வருகிறார் டிரம்ப். மறுபக்கம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ் நகரில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், குழந்தைகள் உட்பட 31 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!