News October 26, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: 15 லட்சம் பேர் புறக்கணிப்பா?

கர்நாடகாவில் கடந்த செப்.22-ல் தொடங்கிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பை 15 லட்சம் பேர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Infosys நாராயண மூர்த்தி-சுதா தம்பதியும், இந்த கணக்கெடுப்பை புறக்கணித்த நிலையில், CM சித்தராமையா சாடியிருந்தார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 6.80 கோடி பேரில், இதுவரை 6.10 கோடி பேர் தகவல் அளித்துள்ளனர்.
Similar News
News October 26, 2025
ஆன்லைன் டிக்கெட் புக்கிங், இனி தயாரிப்பாளருக்கும் ஷேர்!

படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது, புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு ஷேர், தயாரிப்பாளர்களுக்கும் தரப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், புக்கிங் நிறுவனம் என மூவருக்கும் பங்கை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News October 26, 2025
தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா வேண்டாம்: திருமா

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் தனியார் பல்கலை., திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இதை திரும்ப பெற வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு, திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டம் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் கூட, தங்களை பல்கலை.,களாக மாற்றிக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது உயர்கல்வி வணிகத்தை அதிகரிக்க செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 26, 2025
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள்!

புதுமை, தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகிய மூன்றும் இணைந்து உருவாகும்போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. இன்று, இந்தியாவில் பல இளம் தொழில் முனைவோர்கள், தங்கள் நிறுவனங்களை பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்த்தி, “இளம் கோடீஸ்வரர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். அவர்கள் யார் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.


