News April 18, 2024

தந்தை, மகன் போதை தடுப்பு காவல் சட்டத்தில் கைது

image

மரக்காணம் அருகே போதைப்பொருள் பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 85 கிலோ எடை கொண்ட குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஈபி சாலையை சேர்ந்த ரவிச்சந்திரன் (58) மற்றும் அவரது மகன் அரவிந்த் குமார் (31) ஆகியோரை கைதுசெய்தனர். ஆட்சியர் உத்தரவின்பேரில் இருவரும் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

Similar News

News November 4, 2025

விழுப்புரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT)

News November 4, 2025

விழுப்புரம்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க.

News November 4, 2025

விழுப்புரம்: IT வேலைக் கனவா..? DONT MISS!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி துறையில் பணிபுரிய நினைப்பவரா நீங்கள். நல்ல சம்பளத்தில் உங்கள் ஐடி கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘Data analytics using python’ பயிற்சி வழங்கப்படுகிறது இந்தப் பயிற்சிக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரம் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE)

error: Content is protected !!