News October 26, 2025

கிருஷ்ணகிரி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம்<> விண்ணப்பிக்கலாம்.<<>> ஷேர்!

Similar News

News October 26, 2025

பட்டுப்புழு வரப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றி நிச்சயம் என்ற திறன் பயிற்சி மூலம் பட்டுப்புழு வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மை அலுவலர் அனிஷாராணி, பேராசிரியர் மங்கம்மாள் இதனை சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டனர். இதற்கு +2 முடித்தவர்கள் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் டிச.2 தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 9597956268 எண்ணிற்கு அழைக்கவும்.

News October 26, 2025

கிருஷ்ணகிரி: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்திருந்தது 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு <>விண்ணப்பிக்கலாம்.<<>> இந்த பணிக்கு மாதம் ரூ.40,000 – 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-14ஆம் தேதிக்குள்ள இந்த லிங்கில் விண்ணப்பிக்கலாம்.

News October 26, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை, பாய்ந்தது போக்சோ

image

கிருஷ்ணகிரி, நரால்சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (35) பரோடா மாஸ்டர். இவருக்கு சோனியா மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் 9 வயது சிறுமிக்கு பட்டாசு வாங்கி கொடுப்பதாக கூறி தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மத்தூர் போலிசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் குணசீலனை போக்சோவில் கைது செய்தனர்.

error: Content is protected !!