News October 26, 2025

திருவாரூர்: தீ பிடித்து எரிந்த வைக்கோல் கட்டுகள்!

image

கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டிமார் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியசூசை(58). இவரும் இவருடைய தம்பியும் அவர்களது சொந்த நிலத்தில் நெல் சாகுபடிக்கு பின் 1000 கட்டுகள் மற்றும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு 500 கட்டுகள் என சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 1500 கட்டுகள் வைக்கோலை சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில், இவை நேற்று (அக்.25) நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது முழுவதும் வீணாகியுள்ளது.

Similar News

News October 26, 2025

திருவாரூர் மாவட்டத்தின் மழையின் அளவு

image

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் மாவட்டம் முழுவதும் காலை 6 மணி நிலவரப்படி 14 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2025

திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108091>>பாகம்-2<<>>)

News October 26, 2025

திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம் பெற (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!