News October 26, 2025

செங்கல்பட்டு: சாலையில் சுற்றிய மாடுகளை தூக்கி சென்ற நிர்வாகம்

image

திருப்போரூர் ரவுண்டானா பகுதி, செங்கல்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வந்தனர். இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக களத்தில் இறங்கி சாலையில் சுற்றித்திரிந்த 28 மாடுகளைப் பிடித்துள்ளது. இதை அனைத்து இடத்திலும் நடைமுறை படுத்தவேண்டும் என வாகன ஓட்டிகள் கூறினர்.

Similar News

News February 9, 2026

செங்கல்பட்டு: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

image

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News February 9, 2026

செங்கை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

செங்கல்பட்டு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

செங்கல்பட்டு: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE IT NOW.

error: Content is protected !!