News October 26, 2025
ஓசூர்: தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்கும் தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.புதிய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம் 25%,பெண்கள்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35% வரை மானியம் வழங்கப்படும்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சியர் கூறினார்.
Similar News
News October 26, 2025
பட்டுப்புழு வரப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றி நிச்சயம் என்ற திறன் பயிற்சி மூலம் பட்டுப்புழு வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மை அலுவலர் அனிஷாராணி, பேராசிரியர் மங்கம்மாள் இதனை சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டனர். இதற்கு +2 முடித்தவர்கள் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் டிச.2 தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 9597956268 எண்ணிற்கு அழைக்கவும்.
News October 26, 2025
கிருஷ்ணகிரி: B.E / B.Tech / B.Sc முடித்தவர்களா? ரூ.1,40,000 சம்பளம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான 340 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E / B.Tech / B.Sc முடித்திருந்தது 21 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு <
News October 26, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை, பாய்ந்தது போக்சோ

கிருஷ்ணகிரி, நரால்சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசீலன் (35) பரோடா மாஸ்டர். இவருக்கு சோனியா மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் 9 வயது சிறுமிக்கு பட்டாசு வாங்கி கொடுப்பதாக கூறி தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மத்தூர் போலிசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் குணசீலனை போக்சோவில் கைது செய்தனர்.


