News October 26, 2025
அரியலூர்: காவல் நிலையங்களில் எஸ்.பி ஆய்வு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (அக்.25) தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வினை நடத்தினார். ஆய்வின்போது சட்டவிரோத செயல்கள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாஷா, உதவி ஆய்வாளர் தனஞ்செழியன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 26, 2025
அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108118>>பாகம்-2<<>>)
News October 26, 2025
அரியலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் பெற (2/2)

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 26, 2025
அரியலூர்: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..


