News October 26, 2025
சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

*நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமுடியாது. *இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை. *நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது. *உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
Similar News
News October 28, 2025
உலகின் வயதான அதிபரானார் பால் பியா

கேமரூனில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில், பால் பியா 53.66% வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19% வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா, உலகின் மிகவும் வயதான அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இருந்து (41 ஆண்டுகளாக) பால் பியாதான் அதிபராக உள்ளார்.
News October 28, 2025
விஜய் அரசியலுக்கே தகுதியற்றவர்: கருணாஸ்

மக்கள் பிரச்னையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்று விஜய்யை, கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யை விட பெரிய கூட்டத்தை கையாண்டவர் விஜயகாந்த் என குறிப்பிட்ட கருணாஸ், சும்மா ஏதோ சப்ப கட்டு கட்டக்கூடாது என்று காட்டமாக பேசினார். கரூர் துயரை அடுத்து விஜய்யின் செயல்பாடுகள் மீதே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
News October 28, 2025
ராணிப்பேட்டையில் பள்ளிகள் இயங்கும்.. புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டையில் இன்று(அக்.28) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘மொன்தா’ புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அந்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு WAY2NEWS பேசியது. அப்போது, சில ஊடகங்களில் தவறான தகவல் பரவுவதாகவும், இன்று பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவித்தார்.


