News October 26, 2025

கரூர்: சேப்ளாப்பட்டி சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் சேப்ளாப்பட்டி அருகே வெள்ளமடைவில் வசிக்கும் வைரன் மகன் அய்யர் (52) கைது செய்யப்பட்டார். நங்கவரம் போலீசார் செய்த சோதையிடத்தில், அவரிடமிருந்து சட்டவிரோதமாக பதுக்கி விற்ற 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News October 28, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சியில் புதன்கிழமை ( 29.10.2025 ) வார்டு எண் 47 நவலடியான் மண்டபம் சுக்காலியூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 13 துறைகள் 43 சேவைகள் அடங்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மருத்துவ காப்பீடு அட்டை, ரேஷன் கார்டு திருத்தம் போன்ற கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 27, 2025

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

image

கரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவர்/கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நாளை (28.10.25) காலை 10:30 மணிஅளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ள இரண்டாம் தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் 10 நிமிடம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி அளிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News October 27, 2025

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கே பேட்டை மற்றும் வதியம் ஆகிய பகுதிகளில் நாளை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் கே பேட்டை மற்றும் வதியம் பகுதியை சேர்ந்த அனைவரும் தங்களது கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் சமர்ப்பிக்கலாம். இதில் 13 துறைகள் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த முகாம் கே பேட்டை சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!