News October 26, 2025
நாகை: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.
Similar News
News October 28, 2025
நாகை: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 28, 2025
நாகை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஓவிய சவால்!

நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5 நாள் ஓவிய சவால் நடைபெற உள்ளது. இதில் 5 நாள்களுக்கு 5 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 5வது நாள் சிறப்பு ! உங்கள் ஓவியங்களை வகுப்பறையில் காட்சிபடுத்துமாறும், உங்கள் படைப்புகளை #NagaiInktober என்ற ஹேஷ்டேக்குடன் @NagapattinamCollector பக்கத்தை சமுகவலைதளத்தில் Tag செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவித்துள்ளனர்.
News October 28, 2025
நாகை: லாரி மோதி டிரைவர் பரிதாப பலி

வேதாரண்யம் அருகே தலைஞாயிறு திருமாளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா (40). கார் டிரைவர். இவர் நேற்று பைக்கில் நாகையில் இருந்து வேதாரண்யம் சென்று கொண்டிருந்தபோது, ரெட்டாலடி அருகே சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பாரதிராஜா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாண்கண்ணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


