News October 26, 2025

நாளை மிக கவனம்

image

புயல் எச்சரிக்கையால் TN-ல் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. நாளை(அக்.26) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE CAREFUL

Similar News

News October 26, 2025

BREAKING: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? பறந்தது உத்தரவு

image

<<18108169>>’மொன்தா’ புயல்<<>> முன்கூட்டியே உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு ஆணையத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 26, 2025

4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்: அரசு

image

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

News October 26, 2025

EPS துரோகம் செய்பவர் என்பது விஜய்க்கு தெரியாதா? TTV

image

சொந்த கட்சிக்காரர்களுக்கே துரோகம் செய்த EPS, தனக்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா, அவர் என்ன சிறு பிள்ளையா என்று டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை; நீங்கள் எதிர்பாராத விதமாக புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!