News October 26, 2025
இளைஞர்களுக்கு பரிசு தொகை வழங்குக: EPS

ஆசிய கபடி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூர் அபினேஷ் மோகன் தாஸுக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்கள் சிறப்பான ஆட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளது மெச்சத்தக்கது என்றும் பாராட்டியுள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளைஞர்களுக்கு உரிய பரிசுத் தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News October 26, 2025
BREAKING: பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? பறந்தது உத்தரவு

<<18108169>>’மொன்தா’ புயல்<<>> முன்கூட்டியே உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு ஆணையத்தில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நாளை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 26, 2025
4 ஆண்டுகளில் 42.61 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல்: அரசு

நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்துள்ள TN அரசு, ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் தினமும் 1,000 மூட்டை, நெல் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறியுள்ள அரசு, ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
News October 26, 2025
EPS துரோகம் செய்பவர் என்பது விஜய்க்கு தெரியாதா? TTV

சொந்த கட்சிக்காரர்களுக்கே துரோகம் செய்த EPS, தனக்கு துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா, அவர் என்ன சிறு பிள்ளையா என்று டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார். எந்த கூட்டணியும் உடையும் என்று நான் ஜோதிடம் கூறவில்லை; நீங்கள் எதிர்பாராத விதமாக புதிய கூட்டணிகள் உருவாகும். வரக்கூடிய தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமைகின்ற கூட்டணிக்கும் இடையேதான் போட்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.


