News October 25, 2025
நவம்பர் 4: பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நவ.4-ம் தேதி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில்கொண்டு தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் அறிவிக்க உள்ளார்.
Similar News
News January 19, 2026
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
News January 19, 2026
அரசியலை விட்டு விலக முடிவா? ரோஜா விளக்கம்

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தான் தற்போது சினிமா, டி.வி. நிகழ்ச்சிகளில் அதிகமாக வருவதால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் ஒருபோதும் பயந்து ஓடவோ, விலகவோ மாட்டேன். நான் ஒரு பெண் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.
News January 19, 2026
விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத காங்., தலைமை!

தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


