News October 25, 2025
கார் மோதி விபத்து – ஒருவர் பலி; இருவர் படுகாயம்

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அக்.25 மாலை கார் மோதிய விபத்தில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை கழகச் செயலாளர் ராமதாஸ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலூகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 28, 2025
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

விழுப்புரம்: வானூர் அருகே புதுக்குப்பம் ஏரிக்கரை ஆபத்தான நிலையில் உள்ளதால் சீரமைக்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நடத்தினர். போலீசார் தடுத்ததால் அலுவலகம் முன் அமர்ந்து கோஷமிட்டனர். ஏரிக்கு 64 ஏரிகளின் உபரிநீர் வரும் நிலையில், கரை பணமின்றி உடையும் அபாயம் உள்ளதாக மனுவில் தெரிவித்தனர். டி.ஆர்.ஓ. அரிதாஸ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே கலைந்தனர்.
News October 28, 2025
விழுப்புரத்தில் கிராம சபைக் கூட்டம்!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஆகையால், பொதுமக்கள் இதில் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
News October 28, 2025
விழுப்புரம்: IT/ டிகிரி முடித்தவர்களா நீங்கள்?

மத்திய அரசு உளவுத்துறையில் உள்ள 258 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. IT அல்லது டிகிரி முடிருந்திருந்து , 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ..44,900 – ரூ.1,42,400/- வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-16 க்குள்<


