News October 25, 2025

சாகித்திய அகாடமி விருது பெற்ற நெல்லை கல்லூரி பேராசிரியை

image

நெல்லை கல்லூரி பேராசிரியை விமலா மலையாள நூலான “என்டே ஆணுங்கள்” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார். இதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருதை கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற விழாவில் அகாடமி தலைவர் மாதவ. கௌஷிக் வழங்கி பாராட்டினர். விருதுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணம் செப்பு பட்டையமும் வழங்கப்பட்டது. இதற்காக இவரை நெல்லை பேராசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

திருநெல்வேலி: போலீஸ் SSIக்கு அரிவாள் வெட்டு!

image

பணகுடி அருகே செம்பாடு கிராமத்தை சேர்ந்த நந்தகோபால்(52) போலீஸ் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிகிறார். இவரது மகளுக்கு திருமணமான நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்னை உள்ளது. நேற்று மாலை மருமகன் குடும்பத்தினர் நந்தகோபால் வீட்டிற்கு சமாதானம் பேச வந்த போது தகராறு ஏற்பட்டது. மருமகன் சந்தனசெல்வன் நந்தகோபாலை அரிவாளால் தாக்கியுள்ளார். நந்தகோபால அளித்த புகாரில் பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 10, 2026

திருநெல்வேலி: தொழிலாளி வெட்டிக் கொலை!

image

மூன்றடைப்பு, பாணாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி(50), இவரது மனைவி, மகன் கேரளாவில் தங்கி வடை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் 6 மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்த இசக்கிபாண்டி தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இசக்கிபாண்டி சடலமாக கிடந்தார். மூன்றடைப்பு போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

News February 9, 2026

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 9 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!