News October 25, 2025
லஞ்ச் சாப்பிட்டவுடன் குட்டித் தூக்கம் போடுறீங்களா.. ஆபத்து!

பொதுவாக, குட்டித்தூக்கம் உற்சாகத்தை தரும் என்பார்கள். இதனால் பலரும் மதியம் சாப்பிட்டபின், ஒரு குட்டித்தூக்கம் போடுவது வழக்கம். ஆனால், தினசரி குட்டித்தூக்கம் போடுபவர்களுக்கு high BP வரும் வாய்ப்பு 12%, மாரடைப்பு ஆபத்து 24% அதிகரிக்கிறதாம். பிரிட்டனில் 3,60,000 பேரிடம் 11 yrs செய்த ஆய்வில் இதை கண்டறிந்துள்ளனர். குட்டித் தூக்கத்தால் இரவுத் தூக்கம் பாதிப்பதே, பிரச்னைக்கு முக்கிய காரணமாம். SHARE IT.
Similar News
News January 16, 2026
FLASH: பொங்கல் விடுமுறை.. கூடுதலாக ஒரு சிறப்பு ரயில்!

பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு ரயில்களை இயக்கிவரும் தெற்கு ரயில்வே நாகர்கோவில் – தாம்பரம் இடையே கூடுதலாக ஒரு ரயிலை(06160) அறிவித்துள்ளது. இது, ஜன.18-ம் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக திங்கட்கிழமை காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதற்கான டிக்கெட் புக்கிங் நாளை காலை 8 மணிக்கு <
News January 16, 2026
அடுத்து அதிமுக ஆட்சி தான்! அடித்து சொன்ன EPS

TN-ல் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை விரட்ட மக்கள் காத்திருப்பதாக EPS தெரிவித்துள்ளார். MGR-ன் 109-வது பிறந்த நாளையொட்டி (ஜன.17), தொண்டர்களுக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்களை தீட்டினாலும் அதை தவிடுபொடியாக்கி அதிமுக வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். TN மக்களுக்கு நல்லாட்சி தரும் கடமை, பொறுப்பு அதிமுகவினர் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.


