News October 25, 2025
சற்றுமுன்: பின்வாங்கினார் விஜய்

கரூர் துயரம் நடந்து சுமார் ஒரு மாதமாகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்னும் சந்திக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் அவர் கரூர் செல்வதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். இதனால், தனது முடிவில் இருந்து விஜய் பின்வாங்கி இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தான் ஆறுதல் கூட சொல்வீர்களா எனவும் அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.
Similar News
News October 26, 2025
NATIONAL ROUNDUP: இரட்டை குழந்தைகளை கொன்ற தந்தை

*ராஞ்சியில் தீப்பிடித்து எரிந்த பஸ்ஸில் இருந்து பத்திரமாக தப்பிய 40 பயணிகள் *திருப்பதியில் பெய்து வரும் கனமழையால் பக்தர்கள் கடும் அவதி *நாக்பூரில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் *மகாராஷ்டிராவில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் இரட்டை குழந்தைகளை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை
News October 26, 2025
சார்லி சாப்ளினின் பொன்மொழிகள்

*நீங்கள் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் வானவில்லைக் காணமுடியாது. *இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரமில்லை. நம் பிரச்சனைகள் கூட நிரந்தரமில்லை. *நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன், அதனால் நான் அழுவதை யாராலும் பார்க்க முடியாது. *உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
News October 26, 2025
சாதியக் கொடுமையை பேசுவது எப்படி தவறு? அமீர்

‘பைசன்’ போன்ற படங்களின் சமூகத்தில் பிரச்னை உண்டு பண்ண நினைக்கிறீங்களா என மாரிசெல்வராஜை பார்த்து கேட்பது அபத்தமானது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் படங்களை எடுக்கும்போது, கண்ணுக்கு தெரியிற சாதியக் கொடுமையைப் பற்றி பேசுறது தப்புனு எப்படி கேள்வி கேக்குறீங்க என நிகழ்ச்சி ஒன்றில் அவர் கேட்டுள்ளார்.


