News October 25, 2025
தி.மலை: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News February 3, 2026
தி.மலை: கை, கால்களை எடுத்து விடுவேன்…Ex MLA டென்ஷன்

தி.மலை மாவட்டம் ஆரணியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ தடுத்து நிறுத்திய நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தை கோயிலுக்கு பெற்றுத்தருமாறு RDO அலுவலகத்தில் கோயில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு கல் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் திமுக எம்.எல்.ஏ சிவானந்தம், மீறி பணியை தொடர்ந்தால் கை, கால்களை எடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News February 3, 2026
தி.மலை: தூக்கில் தொங்கிய சடலம்- PHOTO

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஏரிக்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் பிப்ரவரி 2, 2026 நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


