News October 25, 2025
BREAKING: புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு

ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே அக்.28 மாலை அல்லது இரவில் Montha புயல் கரையை கடக்கும் என IMD அறிவித்துள்ளது. இன்று இரவு முதலே கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News February 2, 2026
PM KISAN திட்டத்தின் நிதி ₹10,000?.. CLARITY

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக மத்திய அரசு ₹6,000 வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹10,000 ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹6,000) இந்த வாரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
News February 2, 2026
69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ஒரு பிரசவமே கடினமாகிவிட்ட நிலையில், இவரின் கதை ஒரு அதிசயமே! ரஷ்யாவை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் மனைவி, Valentina Vassilyev 1725- 1765 ஆண்டுகளுக்கு இடையில், 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் 16 இரட்டையர்கள்,7 triplets (ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்), 4 quadruplets (ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்) பிரசவங்களும் அடங்கும். அதிக குழந்தைகளை பெற்றெடுத்த கின்னஸ் சாதனை இவருடையதே!
News February 2, 2026
‘நாங்கள் சாகப் போகிறோம்’

தலைப்பை பார்த்ததும் பதற்றம் ஏற்படுகிறதா? கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், இப்படித்தான் தனது உறவினர்களிடம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றபோது, கமலேஷ், அவரது மனைவி இலக்கியா, மகள் ஏஞ்சல்(10) ஆகியோர் விஷம் அருந்தி உயிரற்ற உடல்களாக கிடந்துள்ளனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!


