News October 25, 2025
TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 24, 2026
கோரைப்பாயின் சிறப்பே அதுதாங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் *அமைதியான உறக்கம் ஏற்படும் *மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும் *உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும் *கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடைக் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும். SHARE IT
News January 24, 2026
12 நாளில் முடிவுக்கு வந்த காதல் திருமணம்

காதல் திருமணம் செய்த 12-வது நாளிலேயே இளம் டாக்டர் ஜீவிதா(25) சோக முடிவை எடுத்துள்ளார். கோவையை சேர்ந்த அவர், வீட்டை விட்டு வெளியேறி ஜன.11-ல் அபிஷேக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து, திருமணம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்த ஜீவிதா, வேலை கிடைக்காத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இல்லறம் இனிக்கவில்லை. அதனால், மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
News January 24, 2026
உங்கள் மனைவியிடம் இந்த 7 அறிகுறிகள் உள்ளதா?

உங்க மனைவி, உங்க மீது கோபத்தில் இருப்பதை இந்த அறிகுறிகள் சொல்லிவிடும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களிலிருந்து விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. அப்புறமென்ன, உடனே காரணத்தை கண்டறிந்து, சரிசெய்யுங்கள்!


