News October 25, 2025

TN-ல் மழைக்கு 31 பேர் பலியாகியுள்ளனர்: KKSSR

image

தமிழகத்தில் அக்.1 முதல் 25-ம் தேதி வரை பெய்த மழைக்கு, 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘மோன்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். முகாம்கள் தயாராக உள்ளதாகவும், ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News October 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 500 ▶குறள்: காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.▶பொருள்:வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

News October 26, 2025

RO-KO மேஜிக் அன்றும்.. இன்றும்.. என்றும்

image

இந்தியாவுக்கு வெற்றிகளை தேடித் தருவதில் தங்களை விட கில்லாடிகள் யாருமில்லை என ரோஹித்-கோலி காம்போ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இருவரும் ODI-ல் 19 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப், 12 முறை 150+ மேல் ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர். RO-KO-வின் அன்றும்.. இன்றும்.. என்றும்.. மேஜிக் தருணங்களை SWIPE செய்து பார்க்கவும்.

News October 26, 2025

கண்களில் உங்களுக்கு இத்த பிரச்னை இருக்கா?

image

நமது வாழ்க்கை முறையில் இன்று அதிக நேரம் செல்போன், கணினி உள்ளிட்டவையில் செலவிடுவதால் பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கண்களில் அடிக்கடி நீர் வடிதல், கண் சிவந்து காணப்படுவது, அடிக்கடி தலைவலிப்பது, கண் முன் ஏதாவது ஒன்று மிதப்பது போல தெரிவது, மங்கலான பார்வை உள்ளிட்டவை கண் பிரச்சனைக்கான முக்கியமான அறிகுறிகள். SHARE IT

error: Content is protected !!