News October 25, 2025
உருவானது புயல் சின்னம்.. தமிழகம் முழுவதும் அலர்ட்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுதினம் புயலாக மாறும் என IMD கணித்துள்ளது. இதனால், தமிழகம், புதுவையில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
ஃபேஷன் ப்ரீக்காக மாறிய ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிக இன்ஸ்டா பாலோயர்ஸ் கொண்ட நடிகையாக உள்ளார். நேஷ்னல் க்ரஸ் ராஷ்மிகா, தற்போது ஃபேஷன் ஃப்ரீக்காக மாறியுள்ளார். அவரது ஃபேஷன் போட்டோஸுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News October 26, 2025
திமுகவிடம் 25 சீட் கேட்போம்: விசிகவின் சங்கத்தமிழன்

விசிக இருக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என அக்கட்சி நிர்வாகி சங்கத்தமிழன் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இருக்கும் டிமாண்டை வைத்து 25 சீட்டுகள் வரை கூட கேட்போம். நாங்கள் தான் கேம்சேஞ்சர். எங்கள் கூட்டணிக்காக EPS கூட காத்திருந்தார். நாங்கள் வராததால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விசிகவின் முக்கியத்துவம் திமுக தலைமைக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
Sports Roundup: ரஞ்சி கோப்பையில் தமிழகம் அசத்தல்

*ஆசிய ரக்பி 7’s தொடரில், இந்தியா 21-7 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம். *லண்டன் TT தொடரில், இந்தியாவின் மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி. *நாகாலாந்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழகம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. *புரோ கபடியில் பிங்க் பாந்தர்ஸ் 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்.


