News October 25, 2025
விஜய் கட்சியில் வெடித்த மோதல்

கரூர் துயரத்துக்கு பின் விஜய் வெளியில் தலைகாட்டாமல் மௌனமாக உள்ளார். இதனிடையே தவெகவின் உள்கட்சி பூசல் பூதாகரமாக மாறியுள்ளது. கரூர் சம்பவத்தை அடுத்து N.ஆனந்த் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் மற்றும் டிரால்கள் வந்தன. ஆனால் தவெக ஐடி விங்கை கண்ட்ரோலில் வைத்துள்ள ஆதவ், ஆனந்துக்கு ஆதரவாக செயல்படவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Similar News
News January 16, 2026
கிஃப்டாக வரும் புத்தகங்களை ஸ்டாலின் என்ன செய்வார்?

CM மற்றும் DCM ஆகியோருக்கு கிஃப்டாக வரும் அனைத்து புத்தகங்களும் TN-ல் உள்ள நூலகங்களுக்கு அனுப்பப்படுவதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க விரும்பும் சில புத்தகங்களை மட்டும் தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் என கூறியவர், ஏதேனும் நூலகத்திற்கு புத்தகங்கள் தேவைப்பட்டால், CM, DCM ஆகியோருக்கு கடிதம் எழுதலாம். அவர்கள் மகிழ்ச்சியுடன் அதனை அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
தென்கொரிய Ex அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

தென்கொரிய Ex அதிபர் யூன் சுக் யோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களைத் திரித்து உருவாக்கியது மற்றும் ராணுவச் சட்டத்திற்கு தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகளை பின்பற்ற தவறியது ஆகிய குற்றத்திற்காக பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான மிக கடுமையான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 16, 2026
தமிழக மக்கள் நாயகன் காலமானார்

ஜல்லிக்கட்டு நாயகனான கருப்பணன் (எ) கீழையூர் டொங்கான் காலமானார். 1965 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் காளைகளை தழுவிய காளையரான இவர், ஆயிரக்கணக்கான மாடுபிடி, ஜல்லிக்கட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளார். கபடியிலும் கண்கட்டி வித்தையை காட்டியுள்ளார். இத்தாலி நாட்டின் பரிசுகளையும் வென்று அசத்திய அவரது இறுதி மூச்சு நின்ற நிலையில், அவருக்கு உறவினர்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


