News October 25, 2025
சிவகங்கை: பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி

திருப்புத்துார் அருகே நெற்குப்பை ஆனந்த வள்ளி 45. இவருக்கு புதுக்கோட்டை பொன்னமராவதியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரிய சங்கத்தை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இவரிடம் இரிடியம் விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் உள்ள ரூ.1000 கோடியை விடுவிக்க ரூ.1 லட்சம் கொடுத்தால், ரூ.1 கோடி திரும்ப கிடைக்கும் என கூறி ரூ.30 லட்சத்தை மோசடி செய்த தேனியை சேர்ந்த இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
Similar News
News February 16, 2026
சிவகங்கையில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் மற்றும் சாலை கிராமம் ஆகிய துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (பிப்.17) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.புதூர், புழுதிப்பட்டி, உலகம்பட்டி , நெடுமரம், கட்டுக்குடிப்பட்டி, சாலைக்கிராமம், அய்யம்பட்டி, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், அளவிடங்கான், பூலாங்குடி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் இருக்காது.
News February 16, 2026
சிவகங்கை இளைஞர் கின்னஸ் சாதனை.!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சேர்ந்த ஜான் என்பவரின் மகன் ரஷீத்கான் என்பவர் சிலம்பத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நேற்று (15.02.26) சென்னை பொத்தேரியில் நடைபெற்ற கின்னஸ் சாதனைக்கான சிலம்ப நிகழ்ச்சியில் 4 மணி நேரம் 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை படைத்து சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News February 15, 2026
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


