News October 25, 2025
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

வேப்பனஹள்ளி வட்டார வேளாண்மை அலுவலகத்தில், முருகேசன் என்பவர், உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மங்கம்மா என்பவருக்கு மாடு வாங்க மானியம் ரூ.32ஆயிரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.20ஆயிரம் கிடைத்த நிலையில் மீதமுள்ள 12ஆயிரத்தை விடுவிக்க முருகேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து மங்கம்மா அளித்த புகாரின் பேரில் முருகேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Similar News
News October 26, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (25.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் <
News October 25, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


