News October 25, 2025
சிவகங்கை மக்களே இது கட்டாயம் இருக்க வேண்டியவை

சிவகங்கை மாவட்டத்தில், மழை கால அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சிவகங்கை நகா் -9445853076, 9445853077. காளையாா்கோவில்
-9445853079, நாட்டரசன்கோட்டை-9445853081, மதகுபட்டி-9445853073, மறவமங்களம்- 9445853082, மலம்பட்டி -9445853075, காளையாா்கோவில்-944585307, இந்த எண்களை அவசர தேவைக்கு பயன்படுத்தலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 25, 2025
சிவகங்கை:பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சிவகங்கையில் அக்.27 அன்று மருதுபாண்டியர் நினைவேந்தல், அக்.30 அன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் அக்.27,30 அன்று சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையாங்குடி ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் பொற்கொடி விடுமுறை அளித்துள்ளார். இதே போல் அன்று கீழடி அருங்காட்சியகத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
சிவகங்கை: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) சிவகங்கை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News October 25, 2025
மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள்

சிவகங்கை: காந்தி, ஜவகர்லால்நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நவம்- 4, 5 ஆகிய தேதிகளில் சிவகங்கை நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பங்கேற்புப் படிவத்துடன், போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


