News October 25, 2025
காலையில் இதை குடித்தால் இவ்வளவு நன்மைகள் வரும்!

சீரகம், ஓமம், சோம்பு ஆகிய மூன்றையும் ஊற வைத்த நீரை காலையில் குடிப்பதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை எதிர்பாராத அளவில் மேம்படும். ▶செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் சிறப்பாக இருக்கும் ▶உடல் எடையில் பெரிய மாற்றத்தைக் காணலாம் ▶உங்கள் சருமம் இயற்கையான ஆரோக்கியத்தை பெறும்▶கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT
Similar News
News October 25, 2025
Spam Call-கள் எரிச்சலூட்டுதா? இந்த ட்ரிக்ஸ் போதும்!

கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வாங்கிக்குறீங்களா என அடுத்தடுத்து வரும் Spam call அழைப்புகள் உங்களை வெறுப்பேற்றினால், இதை பண்ணுங்க ✱போன் Settings -> Caller ID & Spam-க்கு செல்லுங்கள் ✱அதில், ‘Filter spam calls’-ஐ On செய்து வைத்து கொள்ளுங்கள். இது பொதுவாக அனைத்து போன்களிலும் இருக்கும் ✱அல்லது TRAI-க்கு ‘START 0’ என 1909 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யுங்கள் போதும். SHARE IT.
News October 25, 2025
காஸா ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு இந்தியா நன்றி

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த இந்தியா, இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.
News October 25, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. நிறைவேறாத கடைசி ஆசை

நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகன் <<18081336>>பூபதியின்<<>> மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000 படங்களில் தனது அசாத்திய நடிப்பால் பெரும் புகழ்பெற்ற மனோரமா, தான் எவ்வளவு முயன்றும் தனது சொந்த மகனை சினிமாவில் ஜொலிக்க வைக்க முடியவில்லை. பூபதி, சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் பிரபலமடையவில்லை. இதனால், மனோரமாவின் கடைசி ஆசையும் மண்ணில் புதைந்துவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


