News October 25, 2025
காயம் ஏற்பட்டால் இதை செய்யக்கூடாது!

பொதுவாக தீ உள்பட எந்த காயமாக இருந்தாலும் முதலில் பலர் தேங்காய் எண்ணெய்யை அப்ளை செய்வது வழக்கம். ஆனால் அது தவறான வழிமுறையாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய் காயத்தை ஆற்றாமல், அதன் ஹீலிங் பண்பை தடுத்து நிறுத்தி விடுமாம். எனவே காயம் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் அதை கழுவி, அந்த இடத்தில் ஆன்ட்டி செப்டிக் கிரீம்கள் அப்ளை செய்வது போதுமானதாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT
Similar News
News October 26, 2025
Sports Roundup: ரஞ்சி கோப்பையில் தமிழகம் அசத்தல்

*ஆசிய ரக்பி 7’s தொடரில், இந்தியா 21-7 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம். *லண்டன் TT தொடரில், இந்தியாவின் மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி. *நாகாலாந்திற்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழகம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. *புரோ கபடியில் பிங்க் பாந்தர்ஸ் 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்.
News October 26, 2025
இரவில் தூங்கும் முன் இதை சாப்பிடுங்க

இரவு தூங்கும் முன் நாம் உண்ணும் உணவுகள், நமது உடல் ஆரோக்கியத்தில் நேரடியாக விளைவை ஏற்படுத்துகிறது. சில பழங்களை எடுத்துக்கொள்வதால், நமது தூக்கம் மேம்படும். காலை புத்துணர்வுடன் எழுந்திருக்க முடியும். என்ன பழங்கள் சாப்பிடுவதால், என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 26, 2025
ஆப்கன் மீது மீண்டும் போர் தொடுப்போம்: பாக்., அமைச்சர்

துருக்கியில் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஆப்கன் மீதான போரை மீண்டும் தொடங்குவோம் என பாக்., அமைச்சர் கவாஜா எச்சரித்துள்ளார். ஆப்கன் அமைதியை விரும்புவது தெரிவதாகவும், அதனால் அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கனில் தீவிரவாதிகள் இருப்பதாக கூறி, பாக்., வான்வழி தாக்குதலை நடத்தியதால், இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.


