News October 25, 2025
₹4000 கோடி நிதியை வீணடித்த திமுக: H.ராஜா

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மாநிலத்தின் வளர்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக H.ராஜா விமர்சித்துள்ளார். விவசாயிகள் நெல்லை பாதுகாக்க நிரந்தரக் கிடக்கு கூட திமுக அரசு 4 ஆண்டுகளில் அமைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு கொடுத்த ₹4,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியை அரசு சரியாக பயன்படுத்தவில்லை எனவும் சாடியுள்ளார்.
Similar News
News October 25, 2025
Hitman அரைசதம்!

இந்திய அணியின் ஓபனர் Hitman ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 2-வது ODI-யிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ODI-யில் இது ரோஹித் சர்மாவுக்கு 60-வது அரைசதமாகும். இந்திய அணி தற்போது வரை 20.1 ஓவர்களில் 119/1 ரன்களை எடுத்துள்ளது.
News October 25, 2025
காஸா ஒப்பந்தம்: டிரம்ப்புக்கு இந்தியா நன்றி

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.
News October 25, 2025
மதுபிரியர்களுக்கு ஷாக்: இங்கு 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28, 29,30 ஆகிய தேதிகளில் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


