News October 25, 2025
2000 பள்ளி மாணவர்கள் புத்தகம் வாங்க இலவச கூப்பன்

நீலகிரி மாவட்டத்தில் 4வது புத்தகத் திருவிழாவினை, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர், அவர் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 2000 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.150 மதிப்பிலான இலவசக் கூப்பன்களை வழங்கும் அடையாளமாக, 10 மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகங்களை வழங்கினார்.
Similar News
News January 28, 2026
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

நீலகிரியில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News January 28, 2026
நீலகிரி: அடிக்கடி கரண்ட் கட் ஆகுதா?

நீலகிரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<
News January 28, 2026
நீலகிரியில் அதிரடி நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று (ஜன.26) தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, குன்னூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் முகமது யூசுப் தலைமையில் சிறப்பு ஆய்வு குழுவினர் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறியதாக 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.


