News April 18, 2024

வீட்டு காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

image

மியான்மரில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை காரணமாக சிறையில் தனிமைச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியை (78) வீட்டு காவலுக்கு அந்நாட்டு ராணுவம் மாற்றியுள்ளது. ஆசியாவின் ‘அமைதிப் புறா’ என்றழைக்கப்படும் அவர், மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய காரணத்தால் அரசுக்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

Similar News

News August 17, 2025

தீபாவளி பரிசை எதிர்நோக்கியுள்ள பட்டாசு நகரம்

image

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பட்டாசு, அச்சகத்திற்கு பெயர் பெற்ற சிவகாசியில் உள்ள தொழிலதிபர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வரி குறைப்பு முறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

News August 17, 2025

நான் இருக்கிறேன்.. BCCI-க்கு சாம்சன் அனுப்பிய செய்தி!

image

ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், அணியில் இடம்பெறுவோமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், சஞ்சு சாம்சன் ஒரு செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, KCA செயலாளர் லெவன் அணிக்கு வெற்றிக்கு உதவியுள்ளார். 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி, தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் எனும் செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

News August 17, 2025

அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.

error: Content is protected !!