News October 24, 2025
கடலூர்: விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

கடலூர் விதை பரிசோதனை நிலையத்தில், இன்று(ஆக்.24) காஞ்சிபுரம் விதை பரிசோதனை அலுவலர் ராஜகிரி அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் விதை முளைப்பு திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதில், 2008 விதை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 95 விதை மாதிரிகள் தர மற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் விஜயா, தில்லைக்ரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News October 25, 2025
கடலூர்: VOTER IDக்கு புது அப்டேட்! செக் பண்ணுங்க!

கடலூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER IDஐ புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு.
1. இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTER ID எண்ணை பதிவிடுங்க.
4. உங்க போனுக்கே VOTER ID வந்துடும். இத்தகவல் மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க..
News October 25, 2025
கடலூர்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

விருத்தாசலம் வட்டம் கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (40), என்பவர் வீட்டில் 3 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் நேற்று (அக்.24) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 25, 2025
கடலூர்: ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்

விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் என்பவரது மகள் ராதிகா (35). ஆலடி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரை காதலித்து ஏமாற்றிவிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நேற்று பள்ளி தாளாளர் மகனான பிரின்ஸ் நவீன் (37) என்பவரை கைது செய்தனர்.


